Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் அர்ச்சுனா: புதிய கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அறிவிப்பு

.

இன்று முதல் தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா அறிவித்துள்ளார்.

பேஸ்புக நேரலையில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தான் நேர்மையான, மக்களின் அரசியல் தலைவராக இருப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும், பிறிதொரு கட்சிக்குள் சென்று அவர்களின் கொள்கைகளை மாற்றவிரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

முதலில் அரசியலுக்கு வர விரும்பியிருக்கவில்லை. எனினும் தற்போது நேரடி அரசியலில் ஈடுபட முடிவுசெய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதற்கா புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளேன். அதில் இளைஞர்கள், படித்த மக்களை இணைத்துக்கொண்டு உண்மையான அரசியல் ஒன்றைச் செய்யவுள்ளேன்.

இந்நிலையில், எனக்கு நிதியுதவி செய்ய விரும்புகின்றவர்கள் என்னுடன் நேரடியாக தொடர்புகொண்டு வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழுக்கு அழகென்று பெயர்… அதுபோல் நாங்கள் அழகான அரசியல் ஒன்றை செய்வோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.