பகைக்கு வித்திட்டு மனித வாழ்வின் அமைதியைச் சீர்குலைக்கும் பிணக்கில்லா பெருவாழ்வே சிறந்தது.
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வு.
"மனித வாழ்க்கையைத் துன்பமாக்குவது பிணக்கு, நம்பிக்கையும் நல்லெண்ணமும் பயிலாத நெஞ்சில் பிணக்குத் தோன்றுகிறது. பகைக்கு வித்திட்டு மனித வாழ்வின் அமைதியைச் சீர்குலைக்கும் பிணக்கில்லா பெருவாழ்வே சிறந்தது. ஆதலினால், இன, மத, பிரதேச, சமூக வேறுபாடுகளை நோக்காது நல்லிணக்கத்துடன் வாழ்வது அவசியமாகும். குழந்தைகளாக இருக்கும் போதே பெற்றோர், குடும்பத்தினர், மூத்தோர், ஆசிரியர்கள், மற்றும் நல்லறிஞர்களின் நல்லெண்ணங்களுக்கு இணங்கி, எமது பிரதேசத்தில் பாரம்பரிய விளையாட்டுக்கள், கலை, இலக்கியங்கள், ஆரோக்கிய உணவு முறைமை, சுதேச வைத்தியம், தியானம், யோகாசனம், நாட்டாரியல் எனப் பலவற்றிலும் பொதிந்து போயுள்ள நல்லிணக்க வாழ்வியலை மீண்டும் கைக்கொண்டால் உங்கள் வாழ்வு ஒளிபொருந்தியதாக அமையும்" என கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ப. தமிழ்மாறன் அவர்கள் தெரிவித்தார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலக கலாசாரப் பிரிவினர் ஒழுக்கமான, ஆரோக்கியமுடைய சமுதாயத்தை முன்னிலைப் படுத்தும் பேரெண்ணத்தோடு நேற்றைய தினம் [30] ஆனைக்கோட்டை மூத்த நயினார் ஆலய இரட்ணசபாபதி மண்டபத்தில் இடம்பெற்ற "நல்லிணக்கம் பேணுவோம்" என்னும் தொனிப் பொருளிளான விழிப்புணர்வு நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் நவாலி முருகானந்த அறநெறிப்பாடசாலை, நவாலி ஸ்ரீ நாகராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய அறநெறிப்பாடசாலை மற்றும் ஆனைக்கோட்டை இந்து சமய விருத்திச்சங்க அறநெறிப் பாடசாலைகளைகளில் பயிலும்
மாணவர்களும் ஆசிரியர்களும் அறநெறிப் பாடசாலை நிர்வாகத்தினரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்
பகைக்கு வித்திட்டு மனித வாழ்வின் அமைதியைச் சீர்குலைக்கும் பிணக்கில்லா பெருவாழ்வே சிறந்தது. ஒருசாராருக்கு மட்டும் போதிப்பதில் பயனில்லை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்!


