Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மத்திய வங்கி மோசடி: தப்பிச்சென்ற அர்ஜுன மகேந்திரனை அழைத்து வருவதாக அனுர உறுதி

.

தேர்தலில் வெற்றிப் பெற்றதன் பின்னர் மத்திய வங்கி மோசடி குறித்து நீதிமன்றத்தால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அநுராதபுரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “அனுரை இதற்கு பதிலளியுங்கள்” என கூறும் பொழுது வார்த்தை தவறியதை

சுட்டிக்காட்டி அவர் கேலிக்குள்ளாக்கினார். மேலும் நாங்கள் அவமதிக்க விரும்பவில்லை, அனைவருக்கும் வயதாகிவிட்டது என கிண்டலாக பேசினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அனுரகுமார ,

தேசிய மக்கள் சக்தியில் இந்த நாட்டை ஆள்வதற்கு யார் இருக்கின்றனர் என கேட்கின்றனர். ஏனைய கட்சிகளிலும் யார் இருக்கின்றனர்?

நான் ஒரு பதில் தருகிறேன். மத்திய வங்கி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள,

சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற அர்ஜுன மகேந்திரா இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்.

மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தான் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு ஆலோசனை வழங்கியதாக கோப் குழுவிடம் அர்ஜூன மகேந்திர பதில் அளித்தார்.

அதனால் என்ன செய்தீர்கள் என்று அவர் கேள்வி கேட்கிறார். அர்ஜுனன் மகேந்திரனை அழைத்து வருவதே முக்கிய வேலை.

நீதிமன்றம் பதில் சொல்லும். அடுத்து நீங்கள் அழைத்து வரப்படுவீர்கள். இதை சொல்வதை விடுத்து செயலில் காணப்பிக்க நினைத்தேன். ஆனால் கேள்வி கேட்கும் பொழுது கூறாமல் இருக்க முடியாத” என்றார்.