Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அரிசி ஆலைகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

.

ரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் சோதனைகளை நடத்துவதற்காக பாரிய அளவிலான அரிசி ஆலை ஒன்றுக்காக தலா 2 அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்களின் நாளாந்த அரிசி தொகை விநியோகம், விலை, அந்த விலையின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு அரிசி கிடைக்கின்றதா என்பன உள்ளிட்ட விடயங்களை இவர்கள் ஆராயவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.

பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் நேற்று(08) முதல் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

10 நாட்களுக்கு தொடர்ச்சியாக அரிசி ஆலைகளில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சில்லறை விலையுடனான நிர்ணய விலையில் நேற்று முதல் அரிசியை விநியோகிப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இவர்கள் இந்த இணக்கப்பாட்டை அறிவித்திருந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விடவும் அதிக விலையில் அரிசியை விற்பனை செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.