Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அனுர 60 வீதமான வாக்குகளை பெறுவாரா?: தேசிய மக்கள் சக்தியின் கணிப்பு

.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் இந்த வாக்கு வீதம் அதிகரிக்கும் என்றும், கருத்து கணிப்புகளை விடவும் வாக்கு வீதம் அதிகமாக கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“இம்முறை ஜனாதிபதி தேர்தல் என்பது பல பிரிவினருக்கான போட்டி அல்ல. திருடர்களுக்கும் நல்லவர்களுக்குமான போட்டியாகும்.

மக்கள் தமது தெரிவை சரியாக செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. சஜித் மற்றும் ரணிலின் மேடையில் இருப்பவர்கள் ஊழல் வாதிகள். அதனால்தான் அங்கும் இங்கும் மாறிக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களுக்கென கட்சியொன்று இல்லை. கொள்கையொன்று இல்லை. அதில் எஞ்சியுள்ளது தேசிய மக்கள் சக்தி மாத்திரமே. அதனால் மக்கள் இலகுவாக தமது தெரிவை மேற்கொள்ள முடியும்.

அனுர வெற்றிபெறுவது உறுதி. தற்போதைய கருத்து கணிப்புகள் பிரகாரம் அவர் 60 வீத வாக்குகளை பெறுவார். எதிர்காத்தில் இந்த வீதம் இன்னும் அதிகரிக்கும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.