Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள்: கொள்கைகள் குறித்து விளக்கம்

.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை சந்தித்து தமது திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை முன்வைத்த பின்னரே மேற்படி சந்திப்பை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

ஆளுங்கட்சி வேட்பாளர் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் மொட்டு கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக் இவ்வாறு வெளிநாட்டு தூதுவர்களை, சந்தித்து வெளிவிவகாரக் கொள்கை உள்ளிட்ட விடயங்களைத் தெளிவுபடுத்தவுள்ளனர்.

அதேவேளை இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாடுகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன. தமது நாட்டு தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் ஊடாக நிலைவரம் கண்காணிக்கப்பட்டுவருகின்றது.