Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதியாக கூடுதல் வழக்குகளை சந்தித்தேன் – மைத்திரி: கின்னஸ் சாதனை என்கிறார்.

.

 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணங்களுக்காக வழங்கப்பட்ட பணம் மற்றும் நிதி உதவிகள் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மூலம் பகிர்ந்தளிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார்.

ரஞ்சித் ஆண்டகையின் வலியுறுத்தல் காரணமாகவே தமக்கு எதிரான பல நீதிமன்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எனக்கு எதிராக நீதிமன்றத்தில் 400 க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

நான் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளேன்.

கர்தினாலின் ஆலோசனையின் பேரிலேயே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

ஒரு வழக்கு உயிரிழந்தவர்களுக்கானது , மற்றையது காயமடைந்தவர்களுக்கு நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நான் ஜனாதிபதியாக இருந்தபோது அனைவருக்கும் தெளிவாக இழப்பீடு வழங்கப்பட்டது.” எனத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், கத்தோலிக்க அமைப்புகள், உலக நாடுகள், இலங்கையில் உள்ள உயர்மட்ட வர்த்தகர்கள் மற்றும் பல தரப்பினரிடம் இருந்து கர்தினால் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது? என மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பணத்தைப் பெற்றவர்களின் பெயர்கள், இந்த பணத்திற்கு என்ன ஆனது என்பது பற்றி கர்தினால் ஒரு பட்டியலை முன்வைத்தால் நல்லது என வலியுறுத்தியுள்ளார்.

அதில் ஒரு சதம் கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

”நான் ஜனாதிபதியாக இருந்த போது அரசாங்கத்தினால் பணம் வழங்கப்பட்டது, ஆனால் தற்போது சொந்தமாக நட்டஈடு வழங்குமாறு வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுதான் தற்போதைய நிலை” என்று அவர் மேலும் தெரிவித்தார்.