Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

ஜனாதிபதி தேர்தலுக்கு செலவு ரூ. 10 பில்லியன்!

.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா செலவிடப்படும் என்றும், அச்சிடுவதற்கான செலவுகள் 200 கோடி ரூபாவாகும் எனவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார் .

2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அச்சிடுவதற்கான செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரிப்பதும் ஒரு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவின ஒழுங்குமுறைச் சட்டம் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அமுல்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சட்டம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 24, 2023க்குப் பிறகு எந்தத் தேர்தலும் நடத்தப்படாததால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இச்சட்டம் முதன்முறையாக அமுல்படுத்தப்படும். ஒரு அரசியல் கட்சியும், வேட்பாளரும் செலவழிக்கக்கூடிய அதிகபட்ச தொகைக்கு இந்த சட்டம் வரம்பு நிர்ணயித்துள்ளது.

வேட்புமனுக்கள் பெறப்பட்ட பின்னர், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அழைக்கப்பட்டு, வேட்பாளர்கள் செலவு செய்யக்கூடிய தொகை நிர்ணயம் செய்யப்படும், மேலும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும்.

வரம்பை மீறிய அல்லது சட்டவிரோதமான செலவுகள் தொடர்பில் எவரும் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் சட்டமா அதிபர் ஊடாக சட்டத்தை ஆராய்ந்து அமுல்படுத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக வலைப்பின்னல்கள் மூலம் தங்களை விளம்பரப்படுத்தும் வேட்பாளர்களை முடிந்தவரை கண்காணிக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.