Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைந்துவிட்டது; பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை.

இலங்கையில் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைந்துவிட்டது; பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை என மகப்பேறு நிபுணத்துவ வைத்தியர் பேராசிரியர் அஜித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக இலங்கையில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை என்பதற்கு இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியே காரணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“குழந்தை பெற்ற சில தம்பதிகள் இரண்டாவது குழந்தையைப் பற்றிக் கருத்தில் கொள்ளவில்லை, குழந்தை இல்லாதவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

இது இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என பேராசிரியர் அஜித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சியைக் காட்டியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது.

2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது 280,000 ஆக குறைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.