Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜெனிவா தீர்மானங்களினாலும் பயனற்றுப் போயுள்ள தமிழருக்கான நீதி: அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன்.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானங்களினாலும் பயனற்றுப் போயுள்ள தமிழருக்கான நீதி: அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன்.

மெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், த.சித்தார்த்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ளது.இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருப்பதாக, அமெரிக்க தூதுவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் போருக்கு பின்னான 15 வருடங்களில் சகல வழிகளிலும் ஏமாற்றங்களை சந்தித்து விரக்தியடைந்துள்ள நிலையில், தங்களுடைய கொள்கைகளை நிலைநிறுத்தவே இவ்வாறா முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அமெரிக்க தூதுவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெனீவா தீர்மானங்களாலும் எந்தவொரு பயனும் இல்லை. இந்த நிலையில் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கி தங்கள் கொள்கையை நிலை நிறுத்தவேண்டும் என்பதற்காக பொதுவேட்பாளர் தொடர்பாக தற்போது பேசிக் கொண்டிருக்கின்றோம் என விளக்கியுள்ளார்.

குறிப்பாக 2ம் வாக்கு தொடர்பாக பேசப்பட்டதோடு, தாங்கள் தெளிவாக பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அதாவது, 2ம் வாக்கு தொடர்பில் தமக்கு உடன்பாடில்லை எனவும், 5 ஆயிரம் வாக்கு வந்தாலும், 50 ஆயிரம் வாக்கு வந்தாலும், 5 லட்சம் வாக்கு வந்தாலும் பரவாயில்லை.

ஏண்ணிக்கை பெரிதல்ல என சுட்டிக்காட்டியுள்ளார்.வந்த வாக்குகளை தங்களின் கொள்கைக்கான வாக்குகளாக எடுத்துக் கொள்ளப்படும் எனவும், வாக்குகள் குறைவாக இருந்தாலும் அடுத்தமுறையேனும் தங்களுடைய மக்களை அணி திரட்டுவதற்கான களத்தை இதன் மூலம் திறந்துவிடலாம் என தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகளை மத அமைப்புக்களை சிவில் சமூகங்களை இதன் மூலம் ஒன்றிணைக்கலாம் என தாங்கள் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கும் கூட வழியற்று இருக்கிறோம் என்பதையும் அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் சிறீதரன் தெரிவித்துள்ளார்.