Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாளை இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்: ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்.

.

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளை (20) கொழும்புக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தை முன்னிட்டு இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்று வரும் திட்டங்களை மீளாய்வு செய்யும் நோக்கில் ஜெய்சங்கர் இலங்கைக்குப் பயணம் செய்யவுள்ளார்.

மேலும் இப் பயணத்தின்போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலில் இலங்கையில் இந்திய முதலீடுகள் தொடர்பில் எஸ்.ஜெயசங்கர் விசேட கவனம் செலுத்துவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற இந்திய மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியக் கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியதுடன் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றிருந்தார்.

இந்திய பிரதமரின் பதவியேற்பு விழாவில் விசேட அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது இந்திய பிரதமருடனான கலந்துரையாடலில் அவரை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்ததுடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரதமர் மோடி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.