Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பாலின சமத்துவம் தவறில்லை: பிரித்துப் பார்ப்பது தவறு என்கிறார் கர்தினால்?

.

 

ஒருவரால் தமது பாலினத்தை தேர்ந்தெடுக்க முடியாது, நாம் பிறந்த பாலினத்தின்படி வாழ வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு முக்கிய சட்டமூலங்கள் தொடர்பில் தற்போது பல விடயங்கள் பேசப்பட்டு வருகின்றன.

அவற்றுள் ‘பெண்கள் வலுவூட்டும் சட்டமூலம்’ ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மூன்றாவது வாசிப்பின் பின்னர் திருத்தங்களுடன் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பாலின சமத்துவ சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் கருத்து தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

இது தொடர்பில் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த கர்தினால்,

” எங்களுடைய கலாசாரத்தில் பாலின சமத்துவம் என்பதனை பிரித்து வேறு குழுவாக்கி பார்ப்பது தவறு.

ஒருவரால் தமது பாலினத்தை தேர்ந்தெடுக்க முடியாது. ஆகவே அவரை நாம் சமூகத்திலிருந்து வேறுபடுத்தாது, அவரை அன்புடன் நடத்த வேண்டும்.

அவருடன் சகோதரத்துவத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும்.

ஒருவரால் தமது பாலினத்தை தேர்ந்தெடுக்க முடியாது, நாம் பிறந்த பாலினத்தின்படி வாழ வேண்டும்.

இதற்கு பொருளாதார ரீதியில் வலுவடைந்த நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். இருந்தாலும் இலங்கை ஒரு சுயாதீனமான நாடு அத்தகைய நாட்டில் எங்களுக்கு தீர்மானங்களையும் சயாதீனமாக எடுக்க முடியும்.

மற்றுமொரு நாடு தடுக்கிறது என்பதற்காக நாமும் அதையே செய்ய வேண்டும் என எந்த நியதியும் இல்லை.” என தெரிவித்தார்.