Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சஞ்சய் மஹவத்த கைதின் பின்புலத்தில் அரசியல் தலையீடு: பியூமி ஹன்சமாலியை காப்பாற்றும் நடவடிக்கையா?

.

 

சட்டவிரோதமாக சொத்துக்களை சேமித்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள பியூமி ஹன்சமாலி மீது முறைப்பாடு செய்த சஞ்சய் மஹவத்த, பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சட்ட நிபுணர்களின் கவனம் திரும்பியுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தாக சஞ்சய் மஹவத்த, கைது செய்யப்பட்ட விதம், புலனாய்வுப் பிரிவினரை அனுப்பப்பட்ட விதம் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பதற்கான பின்னணியை தயாரித்த விதம் தொடர்பில் சட்ட நிபுணர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள பியூமி ஹன்சமாலி மீது நேரடியான சட்ட நடவடிக்கைகள் எதனையும் எடுக்காது அவர் தொடர்பில் தகவல்களை சேகரித்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர், முறைப்பாடு அளித்த சஞ்சய் மஹவத்தவை கைதுசெய்யப்பட்டதன் பின்புலத்தில் அரசியல் காரணிகள் இருப்பதாக உறுதி செய்துள்ளனர்.

பியூமி ஹன்சமாலியின் பெயரில் உயர்மட்ட உயரதிகாரிகள் தமது கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக பலத்த சந்தேகம் இருந்து வந்த நிலையில், தற்போதைய நடவடிக்கைகள் மேலும் சந்தேகத்தை றுதியாகியுள்ளதாகவும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.