Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கனேடிய உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!

இனி பொட்டாஷ் உரத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது. அதை வைத்தே அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பில் பேரம் பேசவேண்டும்

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம் என மீண்டும் மிரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகள் விதித்தார் ட்ரம்ப். 

ஆனால், உரம் மீதான வரி தொடர்பில் அமெரிக்க தரப்பில் எதிர்ப்பு உருவானதைத் தொடர்ந்து, உரம் மீதான வரிகளை மட்டும் 10 சதவிகிதமாகக் குறைத்தார் ட்ரம்ப்.
ட்ரம்பின் வரி விதிப்புகளால் தாங்கள் உரம் வாங்க அதிகம் செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இருதரப்புமே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, அந்த நேரத்தில், இனி பொட்டாஷ் உரத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது. அதை வைத்தே அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பில் பேரம் பேசவேண்டும் என ஒரு யோசனை முன்வைத்திருந்தார். 

ஆனால், அதற்கு கனடா தரப்பிலேயே எதிர்ப்பு உருவானது. 
இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம் என மீண்டும் மிரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.

உள்நாட்டு உற்பத்தியை ஆதரிக்கும் வகையில், தேவையானால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
முன்பின் யோசிக்காமல் இப்படி ஒரு மிரட்டலை விடுத்துள்ளார் ட்ரம்ப். விடயம் என்னவென்றால், அமெரிக்க விவசாயிகள் பலர் உரத்துக்காக கனடாவையே நம்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.