Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனேடிய உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம்: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்!

இனி பொட்டாஷ் உரத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது. அதை வைத்தே அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பில் பேரம் பேசவேண்டும்

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம் என மீண்டும் மிரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
இந்த ஆண்டின் துவக்கத்தில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 25 சதவிகித வரிகள் விதித்தார் ட்ரம்ப். 

ஆனால், உரம் மீதான வரி தொடர்பில் அமெரிக்க தரப்பில் எதிர்ப்பு உருவானதைத் தொடர்ந்து, உரம் மீதான வரிகளை மட்டும் 10 சதவிகிதமாகக் குறைத்தார் ட்ரம்ப்.
ட்ரம்பின் வரி விதிப்புகளால் தாங்கள் உரம் வாங்க அதிகம் செலவிடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இருதரப்புமே புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, அந்த நேரத்தில், இனி பொட்டாஷ் உரத்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடாது. அதை வைத்தே அமெரிக்காவுடன் வர்த்தகம் தொடர்பில் பேரம் பேசவேண்டும் என ஒரு யோசனை முன்வைத்திருந்தார். 

ஆனால், அதற்கு கனடா தரப்பிலேயே எதிர்ப்பு உருவானது. 
இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம் என மீண்டும் மிரட்டியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.

உள்நாட்டு உற்பத்தியை ஆதரிக்கும் வகையில், தேவையானால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரம் மீது கடுமையான வரிகள் விதிப்போம் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.
முன்பின் யோசிக்காமல் இப்படி ஒரு மிரட்டலை விடுத்துள்ளார் ட்ரம்ப். விடயம் என்னவென்றால், அமெரிக்க விவசாயிகள் பலர் உரத்துக்காக கனடாவையே நம்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.