Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணிலுக்கு காலக்கெடு வழங்கிய ராஜபக்ச தரப்பு; சஜித் அணியில் 25 உறுப்பினர்கள் கட்சித்தாவல்

.

 

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஆதரவு வழங்குவதாக தெரிவித்த 25 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இணைத்துக் கொள்ள வேண்டும் என மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிவித்துள்ளது.

இவ்வாறு, இரண்டாவது தடவையாக பொதுஜன பெரமுன ரணிலிடம் இவ்வாறு அறிவித்துள்ளது.

இணைந்துக் கொள்வதாக உறுதியளித்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 25 பேரை இணைத்துக் கொள்ள முடியவில்லை எனின், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து வேறொரு ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதாக கடந்த நாட்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ரணிலிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் பலருடன் அக்கட்சி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும், பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து வேட்பாளர் ஒருவரை முன்வைக்குமாறு பலத்த அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனைவிகளுக்கு தொலைப்பேசி அழைப்பு விடுத்து, கட்சி மாற வேண்டாம் என கணவரை வற்புறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக 27ஆம் திகதி வியாழக்கிழமை வெளியான தேசிய நாளிதழான தினக்குரல் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.