கடலில் மூழ்கிய 21 பேர் கடலோர காவல்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ் மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காப்புப் பிரிவினர் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் மட்டும் 21 உயிர்களை காப்பாற்றியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு கடல் பகுதிகளில் உள்ள நீரேந்தி நிலைகள் மற்றும் குளங்களில் நீந்தும் போது இவர்கள் உயிருக்கு போராடுகின்ற பொழுது கடலோர காவல் படையினரால் காப்பாற்ற பட்டுள்ளனர்
அதன்படி, கல்கிஸ்ஸை, பெந்தோட்டை பலபிட்டிய, ஹிக்கடுவ, மிரிஸ்ஸ மற்றும் நிலாவெளி கடல்களில் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டது,
இதன் போது பதினைந்து (15) வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஆறு (06) உள்ளூர் சுற்றுலாப் பயணிகளையும் வெற்றிகரமாக மீட்டுள்ளனர் கடலோர காவல்படையினர்.
மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் ரஷ்யா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து, பெலாரஸ் மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளைச் சேர்ந்த 9 முதல் 64 வயதுக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்பது தெரியவந்தது.


