Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பெருந்தோட்ட வாக்காளர்களிடையே கள்ளு விநியோகம்: தேர்தல்கள் ஆணைக்குழு விசேட பரிசோதனை

.

பெருந்தோட்ட வாக்காளர்களிடையே கள்ளு விநியோகம்: தேர்தல்கள் ஆணைக்குழு விசேட பரிசோதனை

ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்களை தம்பக்கம் ஈர்க்கும் நோக்கில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பெருந்தோட்ட வாக்காளர்களிடையே பெருந்தொகையான கள்ளு போத்தல்களை விநியோகித்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட பரிசோதனையை ஆரம்பித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த விசேட பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் வெவ்வேறான அமைப்புகள் இவ்வாறு பெருந்தொகையான கள்ளு போத்தல்களை விநியோகித்துள்ள நிலையில் அதற்காக அந்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாளாந்தம் வேலைக்கு வருவது குறைவடைந்துள்ளதாக பெருந்தோட்ட உரிமையாளர்கள் தெரிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாக பெருந்தோட்ட வாக்காளர்களிடையே இவ்வாறு பெருந்தொகையான கள்ளு விநியோகிப்பட்டு வந்துள்ள நிலையில் அவர்கள் முரண்பாடான முறையில் நடந்துக் கொள்வதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிர்வாக தலைவர் மஞ்சுல கஜநாயக்க இந்த முறைப்பாட்டை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னிலைப்படுத்தியுள்ளார்.

தரமற்ற கள்ளு போத்தல்களை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விநியோகிப்பதன் மூலம் அவர்கள் வேலைக்கு சமூகமளிப்பது குறைவடைந்துள்ளதாக பெருந்தோட்ட உரிமையாளர்கள் தனது நிறுவனத்திடம் முறைப்பாடு வழங்கியதாக மஞ்சுல கஜநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.