Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெனிசுலா விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதில்!

ஐக்கிய நாடுகள் சபை சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, அனைத்து நாடுகளினதும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். - காற்றில் பறக்கும் காகிதங்கள்!

வெனிசுலா நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் அமெரிக்கா முன்னெடுத்த இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது குறித்து இலங்கை அரசாங்கம் தமது நிலைப்பாட்டை இன்று வெளிப்படுத்தியது. 
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) நடைபெற்ற விசே ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த அறிவிப்பை விடுத்தார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 
ஐக்கிய நாடுகள் சபை சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின்படி, அனைத்து நாடுகளினதும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். 

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியமானதாகும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். 
இந்த விவகாரம் தொடர்பில் நாளை (5) நடைபெறவுள்ள ஐநா பாதுகாப்புச் சபையின் அவசரக் கூட்டத்தை தாமதமின்றி நடத்துமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. 

ஐநா சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை முரணாக செயற்படுகின்றமை தொடர்பில் ஐநா பொதுச்சபையிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
(கேள்வி): அமைச்சர் அவர்களே, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) அரசியல் பிரிவு இந்த விவகாரத்தைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது? 

(அமைச்சர்): அரசியல் கட்சிகளுக்கு வெவ்வேறு நிலைப்பாடுகள் இருக்கலாம். அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாம் இங்கு தெளிவுபடுத்துகிறோம். 
(கேள்வி): மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடும் அரசாங்கத்தின் நிலைப்பாடும் தற்போதைக்கு ஒன்றுதானே? 
(பதில்): இல்லை. அரசியல் கட்சிகளுக்கு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. அது வேறுபட்டது. 
(கேள்வி): மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் இதைக் கேட்டேன்? 
(அமைச்சர்): அரசாங்கம் என்பது இந்நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது. அந்த அர்த்தத்தில்தான் நாம் இதனை