Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முன்பிருந்த ஜனாதிபதிகளின் இராஜதந்திரத்தை பின்பற்றும் அநுர; முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு விஜயம்

.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு விஜயம் செய்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திகதி நிர்ணயிக்கப்படாத போதிலும் ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டு விஜயம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார் திசாநாயக்க வெற்றிபெற்று இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஜனாதிபதி தலைமையில் இடைக்கால அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அநுரகுமார திசாநயக்கவிற்கு வெளிநாட்டு தலைவர்களும், இராஜதந்திருகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று இலங்கை வரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

குறிப்பாக இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் அதன் எதிர்கால பாதை குறித்தும் ஜெய்சங்கர் விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விஜயத்தின் போது இந்தியா வருமாறு ஜனாதிபதி அநுரகுமாரவிற்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த காலங்களில் இலங்கைக் குடியரசின் ஒவ்வொரு அரச தலைவர்களும் இந்தியாவிற்கே தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

அந்தப் பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமாரவும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.