Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனேடிய பிரதமரின் இனப்படுகொலை குற்றச்சாட்டு: இலங்கை அரசாங்கம் வன்மையாக நிராகரிப்பு

.

போரின் போது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்தை இலங்கை நிராகரித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 ஜூலை 2024 அன்று கனேடிய பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்த குறிப்புகளை இலங்கை அரசாங்கம் கடுமையாக நிராகரிப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயத்தில் இலங்கையின் நிலைப்பாடு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், அதனை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“கனடா பிரதமரின் இந்த அறிவிப்புஇரு நாடுகளிலும் ஒற்றுமை மற்றும் இன நல்லிணக்கத்திற்கு உகந்தது அல்ல” என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கறுப்பு ஜூலை இடம்பெற்று 41 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு கனடா பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,

“இன்று நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் கொழும்பில் தமிழ் பொதுமக்கள் மற்றும் வணிகங்களை குறிவைத்து வன்முறைத் தாக்குதல்கள் தொடங்கின. ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் பலியாகினர்.

பல தமிழர்கள் காயமடைந்தனர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர், நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் தமிழர் விரோதப் படுகொலை, பல தசாப்தங்களாக ஆயுத மோதலாக மாறியதில் பதட்டங்களை அதிகரித்தது. இது இலங்கை வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக உள்ளது.

2022 ஆம் ஆண்டில், கனடா பாராளுமன்றம் மே 18 தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக ஒரு பிரேரணையை ஏற்றுக்கொண்டது.

உலகெங்கிலும் உள்ள தமிழ்-கனடியர்கள் மற்றும் தமிழ் சமூகங்கள் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கும் கௌரவிப்பதற்கும் கனடாவின் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாகும்.

“கறுப்பு ஜூலைக்குப் பின்னர், கனடாவில் 1,800 தமிழர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்வதற்கும், தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் புதிய வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும் கனடா ஒரு சிறப்பு நடவடிக்கை திட்டத்தை நிறுவியது.

கனடாவில் இப்போது உலகின் மிகப்பெரிய தமிழ் புலம்பெயர்ந்தோர் உள்ளனர், மேலும் தமிழர்-கனடியர்கள் நம் நாட்டிற்கு ஒவ்வொரு நாளும் செய்யும் பங்களிப்புகளை நாங்கள் கொண்டாடுகிறோம் – நாங்கள் அவர்களை எப்போதும் பாதுகாப்போம்.

“இந்த நாளில், கறுப்பு ஜூலையின் போது பாதிக்கப்பட்ட மற்றும் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதில் கனடியர்களுடன் இணைந்து கொள்கிறேன்.

இந்த சோகத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிப்போம், மேலும் எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு வெறுப்பு மற்றும் வன்முறை இல்லாத, அமைதியான எதிர்காலத்தை கட்டியெழுப்ப மீண்டும் உறுதியளிப்போம்.” என தெரிவித்திருந்தார்