Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மலையக இளைஞர்களுக்கான தடைகள் உடைந்தன!

.

இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட பெண் பிரதிநிதியான அம்பிகா சாமுவேல், பெருந்தோட்ட சமூகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள இளைஞர்கள் அரசியலில் தீவிர பங்கு வகிக்கும் திறன் குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பெருந்தோட்ட சமூகத்தின் பிரதான அரசியல் கட்சியொன்றின் மூலம் முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் பெண்களில் ஒருவரான அம்பிகா சாமுவேல், தமது அரசியல் பிரவேசம், வெறும் தனிப்பட்ட சாதனையல்ல, குறிப்பாக மற்றவர்களுக்கு ஒரு படிக்கல் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் பெருந்தோட்ட சமூகத்தில் இருந்து அரசியலுக்கு வரும் தம்மை, தமது சமூகத்தின் சகோதர சகோதரிகள் நிச்சயம் பின்பற்றுவார்கள்.ஆனாலும் மகத்தான திறமை மற்றும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உண்மையான ஆசை கொண்ட இளைஞர்கள். நீண்ட காலமாக, சில வரம்புகளுக்குள் சிக்கிக் கொண்டுள்ளதாக அம்பிகா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தற்போது அந்த தடைகள் உடைக்கப்பட்டுள்ளன. எனவே மலையகத்தில் இருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் ஒரு புதிய தலைமைத்துவ அலை உருவாகும் என்று எதிர்பார்க்கலாம் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.பெண்கள் பெரும்பாலும் சமையலறையில் மட்டுப்படுத்தப்பட்டனர், ஆனால் அவர்களில் பலர் அதிக திறன் கொண்டவர்கள்.

அவர்கள் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளனர்.இந்நிலையில், அரசியலில் தாம் எடுத்துள்ள முதல் அடியின் மூலம், நாடாளுமன்றத்திலும் அதற்கு அப்பாலும் அதிகமான பெண்கள் தலைமைப் பதவிகளுக்கு உயர்வதை சந்தேகத்திற்கு இடமின்றி பார்க்க முடியும் என்று அம்பிகா சாமுவேல் தெரிவித்துள்ளார்.