Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கடலில் கவிழ்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்காக பெல் 412 ஹெலிகாப்டர்.

தேவுந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் 5 மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது,

மாத்தறையில் உள்ள தெவுந்தர மீன்பிடித் துறைமுகம் மற்றும் களுத்துறையில் உள்ள பேருவளை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் வேறு வேறு இடங்களில்  கவிழ்ந்ததில் ஆறு மீனவர்களைக் காணமல் போயுள்ளதாக   மீன்வளத் துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடலில் கவிழ்ந்த இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து காணாமல் போன மீனவர்களைத் தேடுவதற்காக பெல் 412 ஹெலிகாப்டரை விமானப்படைக்கு அனுப்புமாறு பாதுகாப்புச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

தெவுந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு மீன்பிடிப் படகும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட ஒரு மீன்பிடிப் படகும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன.

நேற்று (27) மாலை தேவுந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகில் 5 மீனவர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது, மேலும் படகு ஒரு வணிகக் கப்பலில் மோதிய பின்னர் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

விபத்தில் இருந்து ஒரு மீனவர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார், மற்ற நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு தகவல் அளித்த பின்னர், கடற்படை ஒரு தேடுதல் நடவடிக்கை கப்பலை அனுப்பியுள்ளது.

இதற்கிடையில், களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளையின் மொரகல்ல பகுதியில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நந்துன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நந்துன் குமார என்றும், அவர்கள் தனுஷ மரைன் என்ற சிறிய மீன்பிடி படகில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.