Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஆறு நாட்கள் உடலில் கத்தியுடன் போராடிய இளைஞர்!

.

இந்தியா, ஹரியானா மாநிலம், சோனிபட்டியைச் சேர்ந்த தினேஷ் எனும் இளைஞருக்கு கடந்த 16 ஆம் திகதி சிலருடன் சண்டை ஏற்பட்டுள்ளது.

இச் சண்டையினால் தினேஷின் இதயத்தில் கத்தி குத்து ஏற்பட்டுள்ளது.

கத்தியின் கைப்பிடி உடைந்ததனால், கத்தியை வெளியே எடுக்க முடியாமல் போயுள்ளது.

உடனே தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது இதயத்தில் கத்தி முழுதாக சிக்கியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இத்தகைய நிலையில் கத்தியை நேரடியாக நீக்கினால் அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டு நோயாளி உயிரிழக்கலாம்.

அதன்படி, நேற்று புதன்கிழமை அரிதான அறுவை சிகிச்சையின் மூலம் இளைஞரை காப்பாற்ற மருத்துவர்கள் உதவி செய்தனர்.

நோயாளியின் இதயத்துக்கு அருகிலுள்ள சவ்வை கவனமாக திறந்து, சிக்கியிருந்த கத்தியை அகற்றி வலது ஏட்ரியல் அறையை சரி செய்தனர்.

நேயாளியின் நுரையீரலையும் சரி செய்தனர்.

நான்கு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சையில் நோயாளி காப்பாற்றப்பட்டார்.

அவரது உடல் நலமடைந்து வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.