Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கிவருகின்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால், புங்குடுதீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கல்!

.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக  யாழ். புங்குடுதீவு கிராமத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததோடு வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து பாடசாலைகளில் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி முகாம்களில் தங்கியிருந்தனர். 

மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக  டெங்கு, எலிக்காய்ச்சல் போன்ற அபாயகரமான நோய்கள் ஏற்படக்கூடிய நிலை காணப்பட்டதால்.

புங்குடுதீவில் இயங்கிவருகின்ற தன்னார்வத் தொண்டு அமைப்புக்களான புங்குடுதீவு உலக மையம், சூழகம் போன்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளினதும் மற்றும் கிராமசேவகர்களினதும் வேண்டுகோளுக்கிணங்க.

 சுவிட்சர்லாந்து நாட்டில் இயங்கிவருகின்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால், முதல் கட்டமாக  ரூபாய் இரண்டரை இலட்சம் ( 250000 ) நிதியுதவியில் 67 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள், பாய், பெட்சீற், பனடோல், சவர்க்காரம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாவனைப் பொருட்கள் மற்றும் கிருமிநாசினி பொருட்களான லைசோல், குளோரின் போன்றவை வழங்கப்பட்டன. 

இவற்றை பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்கிவைக்கும் செயற்பாட்டில்  ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதான பத்திரன, சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன், கிராம சேவகர்களான ச. சிறீதரன், உதயராஜ், புங்குடுதீவு உலக மையம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் குணாளன் மற்றும் மடத்துவெளி கடற்தொழில் சங்க செயலாளர் சிவரூபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். 

தகுந்த நேரத்தில் இந்த சேவையை ஆற்றிய சுவிஸ் - புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகத்தினருக்கு பயனாளிகள் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.