Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அமெரிக்கா நீண்டதூர ஏவுகணை ரஸ்யா மீது முதல் தடவை தாக்குதல்!

.

அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைன் ரஸ்யா மீது முதல் தடவை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா அனுமதி வழங்கிய மறுநாள் உக்ரைன் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உக்ரைன் ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணையை பயன்படுத்தியுள்ளதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

உக்ரைனின் வடபகுதி எல்லையில் உள்ள பிரையான்ஸ்க் பகுதியை உக்ரைன் இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள ரஸ்ய அதிகாரிகள் ஐந்து ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் ஒன்றின் சிதறல்கள் இராணுவ தளமொன்றின் மீது விழுந்து வெடித்ததில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எனினும் உக்ரைன் செலுத்திய எட்டு ஏவுகணைகளில் இரண்டை ரஸ்யா இடைமறித்து அழித்துள்ளதாக தெரிகின்றது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்