Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் ; 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

.

 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக அந்த திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராகக் கடமையாற்றிய மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் I.S.முத்துமால நியமிக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக்கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் H.M.மங்கல தெஹிதெனிய, நுகேகொடை பிராந்தியத்திற்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் பெரேரா, பயங்கரவாத ஒழிப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகள் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் I.U.K.லொகுஹெட்டி, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் K.B.மனதுங்க ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளராகக் கடமையாற்றிய பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ குற்றப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபராக செயற்படுகிறார்.