Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்- துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சி!

.

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கனேமுள்ள சஞ்ஜீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர், வழக்கறிஞர் போல் நடித்து நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் சிசிரிவி காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. 

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த போது, 2023 ஆம் ஆண்டு ​​செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி கனேமுல்ல சஞ்சீவ குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பூசா சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த கணேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை நீதிமன்ற வளாகத்திற்கு வழக்கு ஒன்றிற்காக அழைத்து வரப்பட்ட போதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றில் விளக்கம்!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சி அமைப்பாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (19) நாடாளுமன்றத்தில் தனது கருத்தைத் தெரிவித்தார்.

பாதாள உலகத்தை அடக்குவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அவற்றையெல்லாம் நாடாளுமன்றத்தின் முன் வெளிப்படுத்துவது சாத்தியமில்லை என்றும் கூறினார்.

இன்று நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்தப் பிரச்சினை தொடர்பில் கேள்வி எழுப்பவே, அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெளிவுபடுத்தினார்.

சம்பவம் தொடர்பில் கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,

சபாநாயகரே, இந்த நேரத்தில், புதுக்கடை நீதிமன்றத்திற்கு வந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.. நீதிமன்றம் எண் 5 இல் கணேமுல்லவில் சஞ்சீவ என்ற நபர் கொலை செய்யப்பட்டார்.

நேற்று இரவு மித்தேனியாவில் இரண்டு குழந்தைகளுடன் துப்பாக்கிச் சூடு நடந்தது. இப்போது புதுக்கடையில் என்ன நடந்தது.

இப்போது இது இந்த நாட்டில் ஒரு பெரிய பாதுகாப்புப் பிரச்சினை எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கிய, ஆளும் கட்சி அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“பாதாள உலக நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கிறது. இது தொடர்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் பாதாள உலகமும், கருப்புப் பணமும், போதைப்பொருள் கடத்தலும் ஈடுபட்டுள்ளது உண்மைதான். இதில் ஈடுபட்டுள்ள சிலர் இலங்கையில் கூட இல்லை.” 

“நாங்கள் இது தொடர்பில் மிகவும் தீவிரமாக செயற்படுவோம் என்று நான் கூற விரும்புகிறேன்.”

“பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத்திற்கு வெளிப்படுத்த முடியாது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் கடுமையாக தலையிடுகிறது. பாதாள உலகத்திற்கு சுதந்திரம் வழங்கப்படாது” என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.