Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ரணிலின் வெற்றியை விரும்பும் ஆசிய பிராந்தியமும் மேற்குலமும்: இந்தியா மாத்திரம் நடுநிலை

.

தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசுகளின் பூகோள அரசியல் நகர்வுகளில் சிக்கியுள்ள இலங்கைத் தீவில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேற்குலக நாடுகளும், ஆசிய பிராந்தியமும் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் ஆதிக்கம் பல நாடுகளில் நிலவுகிறது. இலங்கையில் அரசியலிலும் கடந்த பல தசாப்தங்களாக இந்த மூன்று நாடுகளின் ஆதிக்கமே நிலவுகிறது.

சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும் அவர்களுக்குச் சார்ப்பான ஒருவரை ஜனாதிபதியாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இலங்கையில் இதற்கு முன் இடம்பெற்ற தேர்தல்களை காட்டியும் இந்தத் தேர்தலில் இராஜதந்திரிகள் மற்றும் வல்லரசுகளின் தலையீடுகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக ஆசிய பிராந்திய நாடுகளும் மேற்குலக நாடுகளும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் நீடிப்பதை விரும்புகின்றன.

இலங்கையில் உள்ள மேற்குலக நாடுகளின் தூதரகங்களில் பெரும்பாலானவை ரணிலின் ஆட்சியை விரும்புகின்றன. ஆனால், அமெரிக்கா ரணிலின் ஆட்சி தொடர்பில் திருப்தியற்ற நிலையில் இருப்பதாகவும் அமெரிக்காவின் பல்வேறு நகர்வுகளுக்கு ரணில் ஆதரவான நிலைப்பாட்டில் இல்லையென்றும் தெரியவருகிறது.

அதேபோன்று ஆசிய பிராந்தியத்தில் சீனா ரணிலின் ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதுடன், இந்தியா மௌனம் காத்து வருகிறது. என்றாலும், இந்திய “றோ“ பல்வேறு ரகசிய நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக இந்தியா மௌனம் காப்பதாகவும் அமையபெறும் அரசாங்கத்துடன், இணைந்த பயணிக்க உத்தேசித்துள்ளதாகவும் இந்திய தூதரக வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.

கடந்தவாரம் நிகழ்வொன்றில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, அடுத்து அமையும் எந்தவொரு அரசாங்கத்துடன், இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதாக கூறியிருந்தார். அவரது இந்த கருத்து இந்தியாவின் மௌனத்தை வெளிப்படுத்துகிறது.

என்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெற்றிபெறுவதை இந்தியா விரும்புவதாக பல்வேறு புலனாய்வு செய்தியாளர் கடந்த காலத்தில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

என்றாலும், ஆசிய பிராந்தியத்தில் பலமான நாடுகளாக உள்ள ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், மலேசியா, அரபு நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகள் ரணிலுடன் சுமூகமாக உறவை கொண்டுள்ளதால் சமகால ஆட்சியின் நீட்சியை இந்த நாடுகள் விரும்புகின்றன.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள சகல கருத்துக் கணிப்புகளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தவைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரில் ஒருவருக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டன.

என்றாலும், தேர்தலை வெற்றிக்கொள்ள ரணில் விக்ரமசிங்க தரப்பு பல்வேறு இராஜதந்திர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பிரசார உத்திகளை கையாண்டு வருவதாகவும் அறிய முடிகிறது.