Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் பதவிவிலகவேண்டும்: கட்சி உறுப்பினர்கள் அழுத்தம்

.

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான முடிவினை எடுப்பதற்கான அரசியல்குழுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கை கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் தொடர்பான கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பாது, தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பான சதிக்குத் துணைபோய்விட்டார் என்று குற்றம் சுமத்தியே, கட்சியின் செயலாளரைப் பதவிவிலகுமாகு அழுத்தம் வெளியிடப்பட்டுவருகின்றது.

தமிழசுக் கட்சி தயாரித்த தேசியப் பட்டியல் பெயர்விபரக் கடிதத்தை தேர்தல் ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சியின் செயலாளர் அனுப்பவேயில்லை என்று தற்பொழுது தெரியவந்துள்ளது.

பட்டியலைத் தயாரித்து கடிதத் தலைப்பில், செயலாளர் சத்தியலிங்கம் கையொப்பம் இட்டு அந்தக் கடிதம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டனவே தவிர, அந்தக் கடிதத்தை அவர் தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிவைக்கவேயில்லையாம்.

திட்டமிட்டுத்தான் அந்தக் கடிதம் அனுப்பப்படவில்லை என்று குற்றம்சுமத்தும் கட்சி உறுப்பினர்கள், கட்சியின் செயலாளர் பதவிவிலகவேண்டும் என்று கோரிக்கைவிடுத்துவருகின்றார்கள்.