Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ்க் கட்சிகளுடன் நாங்கள் பேசவில்லை; ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின்

.

வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தி எந்த கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என்று ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை அமைப்பதற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஜே.வி.பி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது ரில்வின் சில்வா மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாங்கள் அவர்களுடன் பேசவில்லை. ஆனால் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவே கூறினர். அவர்கள் இப்போது தேர்தலில் போட்டியிடுவதால் யாருக்கு ஆதரவு என்று தெரியாது. இந்த நேரத்தில் அவர்களுடன் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்த எங்களுக்கு எந்தத் தேவையும் கிடையாது. இதன்படி அவர்களுடன் எந்தத் தொடர்பும் கிடையாது.

இதேவேளை அரசாங்கத்தை அமைப்பதற்காக வேறு கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது என்று நினைக்கின்றோம். இம்முறை தேர்தலில் பெரும்பான்மையான ஆசனங்களை பெற்றுக்கொள்வோம். இதனால் பாராளுமன்றத்தில் எவரின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.