Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கூட்டமைப்பு அல்லாது தனித்து நின்று போட்டியிட வேண்டும் என்று சொல்கின்றவர்கள் கட்சியை சிதைப்பவர்களாக இருப்பர்

.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றினைந்து ஒரு கூட்டமைப்பாக போட்டியிடுவதை நாங்கள் விரும்புகின்றேம். இதுவே மக்களின் விருப்பமுமாகும். தனிப்பட்ட முறையில் போட்டியிட வேண்டும் என்று சொல்கின்றவர்கள் கட்சியை வளர்ப்பதற்குரிய நோக்கமுடையவர்களாக இருக்க கட்சியை சிதைப்பதற்குரிய நோக்கமுடையவர்களாகத்தான் இருப்பார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

தமிழர்கள் ஒற்றுமையாக தமிழ் தேசிய கட்சிகள் ஓரணியில் ஒரு கட்சியாக தேர்தலில் முகம் கொடுக்க வேண்டும் எனும் கருத்தினை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சொல்லியிருக்கின்றார்.

உள்ளூராட்சி தேர்தலில் மாத்திரம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் தனித் தனியாக போட்டியிட்ட பின்னர் இணைகின்ற பட்சத்தில் அதிகமான சபை ஆசனங்களை பெற முடியும் என்றும் அதன் மூலமாக சிறிலங்கா தேசிய கட்சிகளை இணைத்துக் கொள்ளாமல், தமிழ் தேசிய கட்சிகளை மாத்திரம் இணைத்துக் கொண்டு இந்த சபைகளை கைப்பற்றி பலமாக கொண்டு செல்லலாம் என செல்லப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு மட்டும்தான் இந்த நடைமுறை சொல்லப்பட்டது. ஏனைய மாகாண சபை தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து போட்டியிடுவதுதான் தமிழ் தேசிய கட்சிகளின் விருப்பம்.

தற்போது இடதுசாரி கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது தொழிலாளர் நலன் தொடர்பாகவும் ஏழை மக்களின் நலன் பற்றி சிந்திக்கின்ற கட்சி ஆட்சிக்கு வந்திருக்கின்றது. இந்த கட்சியாவது தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். இதைவிட கடந்த காலங்களில் காணி அபகரிப்புக்கள், ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, கப்பம் அதே போன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் இந்த விடயங்கள் எல்லாம் மக்கள் எதிர்பார்க்கும் நீதி நியாயம் உண்மை போன்றவை மக்களுக்கு கிடைக்க வேண்டும். என தெரிவித்தார்.