Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று!

.

சர்வதேச நுகர்வோர் உரிமைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 15 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இந்த நாள் நுகர்வோரின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

நுகர்வோர் அனைவரின் உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, சந்தையில் நடக்கும் தவறுகள் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைகிறது. 

இந்த நாளில் நுகர்வோர் பாதுகாப்பு, நியாயமான வர்த்தகம் மற்றும் நிலையான நுகர்வு மேம்பாடு ஆகியவற்றில் அதிக அவதானம் செலுத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் கருத்து வௌியிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார, 

"இந்த ஆண்டு உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள், நிலையான வாழ்க்கை முறைக்கு நியாயமான மாற்றம் என்பதாகும். சுற்றுச்சூழலுடன் பொறுப்புள்ள வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக இந்த நான் அனுஷ்டிக்கப்படுகிறது. குறிப்பாக, நிலையான, ஆரோக்கியமான மற்றும் நியாயமான தேர்வுகள் அனைத்து நுகர்வோருக்கும் அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் இருப்பதை உறுதி செய்வதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், இந்த விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம், முடிந்தவரை நிலையான தயாரிப்புகளை நுகர்வோர் தேர்ந்தெடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் நெறிமுறை வணிகங்களை ஆதரிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எமது நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்து பணியாற்றும்."