Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முன்னாள் ஜனாதிபதிகளின் வசதிகள் தொடர்பில் ஆய்வு; புதிய அரசாங்கம் அதிரடி தீர்மானம்!

.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகள் தொடர்பில் ஆராய தற்போதைய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மூலம் அல்லது ஏனைய அமைச்சுகள் மூலம் வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

இதேவேளை, ஒவ்வொரு பாதுகாப்பு துறைகளுக்காக வழங்கப்பட்டுள்ள பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எண்ணிக்கையும் ஆராயப்படவுள்ளது.

குறித்த பாதுகாப்பு துறைகளுக்காக வாடகை அடிப்படையில் கட்டிடங்கள் வழங்கப்பட்டிருப்பின் அதற்கு செலவிடப்படும் மாதாந்த வாடகை மற்றும் வழங்கப்பட்டுள்ள ஏனைய வசதிகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின், அமைச்சர்களின் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைக் கோரல்கள் மற்றும் வரப்பிரசாதங்கள் தொடர்பில் மீள ஆய்வு செய்வது தொடர்பில் அமைச்சரவை நியமித்துள்ள குழு மூலம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.