Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தேசிய மக்கள் சக்தியே போதைப் பொருளை ஒழிக்கக்கூடிய ஒரே அரசாங்கம்

.

நாட்டில் பாரிய விளைவுகளை உருவாக்கியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் இல்லாதொழிக்கும் என NPP ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விநியோகம் அரசியல்வாதிகளின் அனுசரணையுடன் நடைபெறுவதாக தெரிவித்தார்.

“நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு அரசியல்வாதிகள் பின்னால் உள்ளனர். சமீபத்தில் பல அரசியல்வாதிகள் தங்கள் ஜீப்பில் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவை கொண்டு செல்லும் போது பிடிபட்டனர்,” என்று அவர் கூறினார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு சிறுவர்கள் பலியாகிவிட்டதாகத் தெரிவித்த திஸாநாயக்க, குழந்தைகள் போதைப்பொருளுக்கு அடிமையாகும்போது முழு குடும்பமும் துயரத்தில் விழுவதாகக் கூறினார்.

“இந்த அனுராதபுர புனித நகரம் கடந்த காலங்களில் மிகவும் அமைதியாக இருந்தது, அங்கு யாரும் பயமின்றி வந்து நாட்களை கழித்து மகிழலாம். நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்து பலநாட்கள் தங்கினோம், இப்போது நகரில் போதைப்பொருள் அதிகமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

NPP யாருக்கும் பயப்படவும் இல்லை, கடனாளியாகவும் இல்லை என்று கூறிய அவர், NPP மட்டுமே போதைப்பொருளை ஒழிக்கக்கூடிய ஒரே அரசாங்கம் என்றும் கூறினார்.

சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் சுதந்திரத்தை பொலிஸாருக்கு NPP வழங்கும் என்று கூறிய திஸாநாயக்க, அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நீக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.