Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

ரணில் – மகிந்த ஓய்வு பெறவே மாட்டார்கள்

.

ரணில் விக்கிரமசிங்கவும் மகிந்த ராஜபக்‌ஷவும் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும், அவர்களின் மனங்களில் மீண்டும் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கின்றது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதன்போது அவர் கூறுகையில்,

மகிந்த ராஜபக்‌ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால் ஓய்வு பெற்றது போன்று தெரிந்தாலும் அவர் அவ்வாறு அரசியலில் இருந்து போகப் போவதில்லை. அவர் மாத்திரமன்றி அவரின் குடும்பத்தில் நாமல் தவிர்ந்த மற்றையவர்களும் ஓய்வு பெற வேண்டும்.

இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் அதனை நம்ப முடியாது. 2005ஆம் ஆண்டில் இருந்து இவர் இப்படிதான் கூறிக்கொண்டிருக்கின்றார்.

இருவரின் மனங்களிலும் மீண்டும் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணம் உள்ளது. அநுரகுமார திஸாநாயக்க எங்கேயாவது தவறு செய்துவிடுவார் அப்போது மீண்டும் வாய்ப்பை பெறலாம் என்று நினைக்கின்றனர். இந்த சம்பிரதாயம் இல்லாமல் போக வேண்டும். மகிந்த ராஜபக்‌ஷ ஓய்வு பெற்று நாமலுக்கு இடமளிக்க வேண்டும். அதேபோன்று ரணில் ஓய்வு பெற்று ருவான் விஜேவர்தனவுக்காகவது இடமளிக்க வேண்டும். அத்துடன் அவர்களின் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கின்றனர். வேண்டுமென்றால் அவர்களுக்கும் சந்தர்ப்பங்களை வழங்கலாம்