Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

5 குழந்தைகளை போல் வயிற்றில் தோற்றமளித்த 15 கிலோ கட்டி

.

 

இலங்கைத்தீவின் தென்பகுதியான ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் தாய் ஒருவரின் வயிற்றில் பதினைந்து கிலோகிராம் கட்டி ஒன்று வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மகப்பேறு மருத்துவர் சமந்த சமரவிக்ரம தெரிவித்தார்.

வீரகட்டிய பிரதேசத்தில் வசிக்கும் முப்பத்தெட்டு வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவருக்கு இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது தாய் நலமுடன் இருப்பதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மருத்துவர் சமந்த சமரவிக்ரம தெரிவிக்கையில்,

இரண்டு உதவி வைத்தியர்கள், ஒரு மயக்கவியல் நிபுணர் மற்றும் மூன்று தாதிகள் அடங்கிய குழுவினால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பல ஆண்டுகளாக அவரது வயிறு படிப்படியாக வீங்கி வருவந்ததால் அவருக்கு பல்வேறு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும், அவரை குணப்படுத்தமுடியவில்லை. தொடர்ந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு வந்து மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணரைச் சந்தித்தார்.

ஏனெனில், அவரது வயிறு பாரம் தாங்க முடியாமல் நீண்டுகொண்டிருந்தது. அவரது உடல்நிலை சரியாக கண்டறியப்பட்டு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக சிறப்பு மருத்துவர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்தார்.

இந்த நோய் ஒரு நார்த்திசுக்கட்டி நோய் (Fibroid) என்றும் திசுக்கள் வீக்கம் மற்றும் முடிச்சு காரணமாக இந்த நிலை ஏற்படுவதாகவும் மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில நாட்களுக்கு உரிய சிகிச்சை பெறவில்லை என்றால் அவர் உயிரிழந்திருப்பார் என்றும் மருத்துவர் சமந்தா சமரவிக்ரம தெரிவித்துள்ளார்.

அனைத்து தாய்மார்களுக்கும் வயிற்றில் ஏதேனும் வலி ஏற்பட்டால் விசேட வைத்தியரிடம் பரிசோதிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.