Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழர்களின் நம்பிக்கையை அநுர குலைக்க மாட்டார் – சந்திரசேகரன்

.

தமிழ்த் தலைவர்கள் நீண்டகாலமாக வாக்குறுதிகளை நிறைவேற்றாதிருக்கின்ற நிலையில் அவர்கள் மீதான ஏமாற்றமே வடக்கு, கிழக்கில் எமது வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்துள்ள என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையை குலைக்கப்படமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி, வடக்கு, கிழக்கில் பெற்றுள்ள தேர்தல் வெற்றி சம்பந்தமான கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலின்போது, ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் அவரை ஆதரித்த பரிவாரங்களும் எம்மை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரசாரங்களை செய்தார்கள்.

சொற்ப காலமே ஆட்சியில் இருப்பார்கள். வன்முறைகள் தோற்றம் பெறும் என்றும் கூறினார்கள். இதனால் தமிழ் மக்கள் மத்தியில் எம்மீது சந்தேகங்கள் இருந்தன. இதனால் 25ஆயிரத்துக்கு உட்பட்டதாகவே வாக்குகளை அளித்தார்கள்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னரான 45நாட்களில் ஜனாதிபதி அநுரகுமாரவின் ஆட்சியை மக்கள் நேரடியாகவே பார்த்தார்கள். எந்தவிதமான வன்முறைகளும் இடம்பெறவில்லை. சுமூகமான நிலையில் நாடு செயற்பட்டது.

இதனால் தமிழ் மக்களுக்கு எம்மீதான நம்பிக்கை ஏற்பட்டது அதுமட்டுமன்றி, எழுபது ஆண்டுகளாக பிரபுத்துவ தமிழ் அரசியல்வாதிகள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள்.

ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை தமிழ் மக்களுக்கான உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்றாடம் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.

போதைப்பொருள் பாவனைக்கு இளையோர் அடிமையாதல் உள்ளிட்ட நெருக்கடிகள் பல உள்ளன. அந்தப்பிரச்சினைகள் கூட சரியாகக் கையாளப்படவில்லை. இதனால் அவர்கள் அரசியல் பிரச்சினைகளுக்கு முன்னதாக தமது அன்றாடப் பிரச்சினைகளை களைவதற்காக மாற்றத்தை எதிர்பார்த்தார்கள்.

அந்த மாற்றத்துக்காவே எமக்கு வாக்களித்துள்ளார்கள். நாம் நிச்சயமாக அவர்கள் கொண்டிருக்கின்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.

ஜனாதிபதி அநுரகுமாரவும்ரூபவ் தேசிய மக்கள் சக்தியும் தமிழ் மக்களின் நம்பிக்கையை குலைக்காது பாதுகாக்கும் என்றார்.