Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அனுரகுமார திஸாநாயக்கவை உடனடியாக கைது செய்யுங்கள்; புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

.

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சிவில் அமைப்பு ஒன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் தகவல்களை மறைத்து அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அநுரகுமார திஸாநாயக்கவை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி அந்த அமைப்பின் சார்பில் தர்ஷன தந்திரிகே உள்ளிட்டோரால் இந்த முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அனுரகுமார திஸாநாயக்க அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்வதாக அக்கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் லால்காந்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் பிரகாரம் அனுரகுமார திஸாநாயக்கவை பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு குறித்த சிவில் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.