"மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம்" என்பதன் அடிப்படையில் அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏறாவூர் பற்று பிரதேசத்தில் யுத்தத்தினால் அவயங்களை இழந்த போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள் உட்பட இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாக பிறந்தவர்கள் உள்ளடங்களாக சுமார் 850 மாற்று திறனாளிகள் உள்ளனர்.

"மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம்" வேலைத்திட்டம்!
"மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவுவோம்" என்பதன் அடிப்படையில் அவர்களுக்கான உதவித் திட்டம் ஒன்று இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு கை கொடுத்து உதவும் நோக்கில்
ஏர்முனை மாற்று திறனாளிகள் சங்கம் ஒழுங்கு செய்திருந்த மேற்படி சந்திப்பின் பிரதம அதிதிகளாக ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளரும், ஆறாம் வட்டார தமிழரசுக் கட்சியின் பிரதான வேட்பாளருமான செ.நிலாந்தன் மற்றும் சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் அவர்களும் கலந்து கொண்டு உதவி திட்டங்களை வழங்கி வைத்தனர்.
ஏறாவூர் பற்று பிரதேசத்தில் யுத்தத்தினால் அவயங்களை இழந்த போராளிகள், மாவீரர் குடும்பங்கள், பொதுமக்கள் உட்பட இயற்கையாக மாற்றுத்திறனாளிகளாக பிறந்தவர்கள் உள்ளடங்களாக சுமார் 850 மாற்று திறனாளிகள் உள்ளனர்.
இவர்களுக்கான நலன்புரி வேலைத்திட்டங்களை ஏர் முனை மாற்று திறனாளிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இன்றை கூட்டத்தில் ஏறாவூர் பற்று மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடாத்துவதற்கான ஆரம்பகட்ட நிதியுதவியை வழங்குவதற்கு சமூக செயற்பாட்டாளரும், பிரபல வர்த்தகருமான மோகன் அவர்கள் முன் வந்ததோடு அதனை ஆரம்பிக்கும் முகமாக முதல் மாதத்திற்கான காசோலையை சங்க நிர்வாகத்தினரிடம் வழங்கி வைத்தார். அத்துடன் ஒரு வருடத்திற்கான நிதியுதவியையும் அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இங்கு ஊடகவியலாளர் நிலாந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
ஏறாவூர் பற்றில் உள்ள மாற்று திறனாளிகள் குடும்பத்தில் இடம்பெறும் மரணச் சடங்குகளை நடாத்துவதற்கான நிரந்தர பந்தல், கதிரைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி தருவதற்கான உதவிகளை புலம்பெயர் சமூகம் ஊடாக பெற்றுத் தருவதாகவும், மாற்று திறனாளிகள் குடும்பத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தேவைப்படும் உதவிகளை பெற்று தருவதற்கும், விசேட தேவையுடைய குடும்பங்களின் சில சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும், திடீர் அனர்த்தங்கள் மற்றும் மரணங்கள் ஏற்படும் போது மாற்று திறனாளிகள் குடும்பத்திற்கு நிதியுதவி செய்வதற்கான ஒரு தொகை நிதியை திரட்டுவதற்கான உதவிகளை பிரதேச வர்த்தகர்கள் மற்றும் புலம்பெயர் உறவுகளிடம் இருந்து பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக அங்கு இருப்பதாக தெரிவித்தார்.
இதன் போது அடுத்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்து மாற்று திறனாளிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டது.