பல்வேறு. குற்றங்களுக்காக தேடப்பட்டுவந்த நபர் இரு மாதங்களின் பின் காரைநகரில் கைது!
பல்பொருள் அங்காடி உடைத்து திருடப்பட்ட சம்பவம் - CCTV காட்சிகள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
பல்வேறு. குற்றங்களுக்காக தேடப்பட்டுவந்த நபர் இரு மாதங்களின் பின் காரைநகரில்
கைது!
காரைநகர் பல்பொருள் அங்காடி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் சந்தேக நபர் இரண்டு மாதங்களின் பின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் -
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு செல்லும் புது வீதி சந்தியில் உள்ள பல்பொருள் அங்காடி உடைத்து திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கிருந்த CCTV காட்சிகள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
ஆனாலும் அவர் பொலிசாரிடம் மாட்டாது தலைமறை வாகியிருந்தார். இன்னிலையில் இன்று இரவு 8.30 மணியளவில் பொலிஸ் அதிகாரிகளான SI வினோத் மற்றும் சார்ஜன் ராஜித ஆகியோரது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது அவர் கைதாகியுள்ளார்.
காரைநகர் களபூமியைச் சேர்ந்த குறித்த நபர் கைதாகும்போது அவரது உடமையில் ஹெரோயின் ரக போதைப் பொருளும் இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இதே நேரம் குறித்த நபர் ஏற்கனவே இருவேறு வழக்குகளுக்காக நீதிமன்றால் பிடிவிராந்த பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என்று பொலிசார் தெரிவித்தனர்...
இதையடுத்து குறித்த நபர் போதைப்பொருள், திருட்டு மற்றும் பிடிவிராந்தில் தேடப்பட்டு வந்த நபர் என்ற பல்வேறு குற்றங்களுக்காக க்சுதாகியுள்ள நிலையில், நாளை (7) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்தனர்.


