Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

ஜனாதிபதி தேர்தல்: சமூக ஊடக கருத்துக்கணிப்புகளை நிறுத்த நடவடிக்கை

.

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து சமூக வலைத்தளங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி இந்த வாரம் தேர்தல் ஆணையத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் இது குறித்து விவாதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக்கணிப்பு காரணமாக சில வேட்பாளர்கள் பாரபட்சம் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கருத்துக்கணிப்புகளை யார் நடத்தியது என்பது குறித்து தேர்தல் ஆணையமும் இந்த நாட்களில் ஆய்வு நடத்தி வருகிறது என்றார்.

ஆய்வின் தகவல்களும் பெறப்படும் என்றும், இந்தக் கருத்துக் கணிப்புகளை நிறுத்தும் முறை குறித்தும் ஆணையத்தில் விவாதிக்கப்படும் என்றும் தலைவர் கூறினார்.

இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது இலகுவானது.

எனினும், சமூக ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது இலகுவானதல்ல.

ஆகையினால், இது தொடர்பில் விரைவான வழிமுறை தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.