Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விடுதலைப் புலிகள் ஓயவில்லை; மகிந்தவை கொலை செய்ய சதி

.

விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், அதன் அலை இன்னும் ஓயவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கான சதித்திட்டம் இன்னமும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் வெற்றிக்காக ஹிரியாலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று அனுரகுமார திஸாநாயக்க, மகிந்த ராஜபக்வின் பாதுகாப்பை நீக்கி உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றினால் அவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.

காலி முகத்திடல் தாக்குதல் இடம்பெற்ற மே ஒன்பதாம் திகதி அலரி மாளிகையில் வைத்து மகிந்த ராஜபக்சவை கொல்வதற்கான ஆயத்தங்கள் இருந்தன.

எனினும், திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு அவர் உயிரை காப்பாற்றியதாக திஸ்ஸ குட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.