கள கற்கைப் பயணம்: யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள்
.
யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விரிவுரையாளர் எஸ். சிவகாந்தன் மற்றும் உதவி விரிவுரையாளர்களுடன் இணைந்து, குற்றவியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக (06) நேற்று முன்தினம் யாழ்ப்பாண சிறையில் கள ஆய்வொன்றை மேற்கொண்டார்கள்.
ஆய்வின் போது போது, சிறைச்சாலை சார்ந்த பல்வேறு அம்சங்கள், சிறையின் நோக்கங்கள், கைதிகளுக்கான மறுவாழ்வு திட்டங்கள் உள்ளிட்டவை பற்றி முழுமையான விளக்கமும் வழிகாட்டுதலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
குற்றவியல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இத்தகவல்களை மாணவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தனர்.
கள கற்கைப் பயணம், சிறை அமைப்பைச் சுற்றியுள்ள பல புதிய அறிவுகளையும் பார்வைகளையும் மாணவர்களுக்கு வழங்கியது. பீடாதிபருக்கும், சமூகவியல் துறைத் தலைவருக்கும், மாணவர்களின் பேராசிரியர்களுக்கும், மேலும் அம்மாணவர்களுக்கு அனுமதி வழங்கி வழிகாட்டிய சிறை மற்றும் குற்றவியல் பிரிவு அதிகாரிகளுக்கும் பல்கலை மாணவர்கள் தங்கள் இதயப்பூர்வமான நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டனர்.
குற்றவியல் பயில்துறையில் இது ஒரு முக்கியத்துவம் மிக்க மற்றும் வளமான கற்றல் அனுபவமாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


