Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!; டெல்லி சந்திப்பில் மோடி ரணிலிடம் தெரிவிப்பு

.

 

உத்தேச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தேர்தலின் பின்னர் டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். டெல்லி – ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின் பின்னர் அனைத்து நாட்டு தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இதன்போது இலங்கையில் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் சம்பாஷனை இடம்பெற்றது. இதன்போது பிரதமர் நரேந்திர மோடி மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.

அங்கு பிரதமர் மோடி மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் இந்த வருடம் இறுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நீங்கள் எதிர்கொள்ள உள்ளீர்கள்தானே. அதில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள். குறுகிய கால அழைப்பில் எனது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றமையானது பெரும் ஊக்கத்தை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

மன்னர் ஆட்சிக்காலம் தொடக்கம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருந்துள்ளன. இலங்கை மன்னர்கள் பலர் இந்தியாவுக்கு விஜயம் செய்து மன்னர்களின் முடிசூட்டு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த நெருக்கமான உறவுகள் இன்றும் வலுவாக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தேர்தலில் வெற்றி பெற எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். தேர்தலின் பின்னர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்து வாழ்த்துக்களை கூறி பிரதமர் மோடி வழியனுப்பிவைத்தார்.