Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தேர்தலுக்குப் பின் வன்முறையா!- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செய்தி என்ன?: விதிமுறைகள் மீறப்படுகிறதா?

.

தீர்மானமிக்க 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆயத்தமாகி வரும் நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த ஒரு கருத்து தொடர்பில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கடந்த 13ஆம் திகதி பொதுமக்களை அச்சத்திற்குட்படுத்தும் வகையிலான விடயங்களை உள்ளடக்கி ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையை மேற்கோள்காட்டி, சில செய்தித் தளங்கள் “எந்தவொரு தேர்தலின் பின்னரும் வன்முறைகள் இடம்பெறும்” என செய்தி வெளியிட்டிருந்ததையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்தக் கருத்தை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள நிலையில் கடந்த சில தேர்தல்களை நோக்கும் போது தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.

அவ்வாறு இருக்கும் போது பொறுப்பற்ற முறையில் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்தல் அதுவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் மூலமே அதனை பிரச்சாரம் செய்திருப்பது மிகவும் பாரதூரமான தேர்தல் விதி மீறல் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில் ”ஜூலை 2022 இல் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டதால், 2024 செப்டம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது” என தலைப்பிடப்பட்டிருந்தது.

அதன் மூலம் இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக வலியுறுத்தப்பட்ட கருத்து கீழே காட்டப்பட்டுள்ளது.”

”எந்தவொரு தேர்தலுக்கு பின்னரும் வன்முறைச் செயல்கள் இடம்பெறும். நாம் அவற்றை நிறுத்த வேண்டும். இந்தத் தேர்தலுக்குப் பிறகு எந்த வகையிலும் வன்முறைகள் நடைபெறக் கூடாது. அது குறித்து நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.”

எவ்வாறாயினும், அண்மைக்கால தேர்தலுக்கு பின்னரான வரலாற்றில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில், விசேட கவனம் செலுத்தி இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.