Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டி: ஜூலை 21இல் ரணில் வெளியிட போகும் அறிவிப்பு

.

 

இலங்கைத் தீவில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராf 2022ஆம் ஆண்டு தலைநகர் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் கடுமையான போராட்டங்கள் வெடித்தன.

மக்கள் எதிர்ப்பால் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய அரசாங்கத்தின் அமைச்சர்களும் தமது பதவிகளை துறந்தனர்.

கோட்டாபய ராஜபக்சவும் தமது பதவியை இராஜினாமா செய்ததால் தற்காலிக ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்க, 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்ற பெரும்பான்மையின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவானார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நெருங்கியுள்ளன. எதிர்வரும் ஜுலை 21ஆம் திகதியுடன் இரண்டு வருடங்களை எட்டவுள்ளதால் அன்றைய தினம் அவர் முக்கிய அறிவிப்பை நாட்டு மக்களுக்கு வெளியிட உள்ளார்.

இதுகுறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே,

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான பகிரங்க அறிவிப்பை எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிடுவார்.

“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று 2 வருடங்கள் நிறைவு பெறும் நாளில் (ஜூலை 21) தேர்தலில் போட்டியிடும் பகிரங்க அறிவிப்பை அவர் வெளியிடுவார். இது தொடர்பில் கட்சிக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியான பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். கட்சி கூடி உரிய வகையில் – உரிய முடிவை எடுக்கும்.” – என்றும் சுட்டிக்காட்டினார்.