Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு லசந்தவின் மகள் எழுதிய கடிதம்

,

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்ரமதுங்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுர பி.மெத்தேகொடவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.

கடந்த காலங்களில் கவனத்தை ஈர்த்துள்ள பல குற்றவியல் விசாரணைகள் மீதான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இந்தக் கடிதத்தை அவர் எழுதியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அனுர பி. மெத்தேகொடவுக்கு அஹிம்சா விக்ரமதுங்க எழுதிய கடிதத்தில் சட்டமா அதிபர் அலுவலகம் முறையாக நீதி வழங்கத் தவறியதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இரண்டு வழிகளில் பதிலளித்துள்ளதாகக் கூறியுள்ளார்.

மனித உரிமைகளுக்காகப் போராடுவதில் சட்டத்தரணிகள் சங்கம் முன்னணியில் இருப்பதாக அனுர பி. மெத்தேகொட ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையும் இங்கே மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் தனது தந்தையின் கொலைக்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடுப்பதில் ஏற்பட்ட நீண்டகால தாமதம் தொடர்பில் மெத்தேகோட கேள்வி கேட்கத் தவறியதை மேற்கோள் காட்டி சட்டத்தரணிகள் சங்கத் தலைவரின் நீதிக்கான அர்ப்பணிப்பு தொடர்பில் அஹிம்சா விக்ரமதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிபுபடுத்தப்பட்ட பொலிஸ் அறிக்கைகள் உட்பட முக்கியமான ஆதாரங்களை புறக்கணித்ததாகவும் முழுமையாக விசாரிக்காமல் அல்லது அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொள்ளாமல் முடிவுகளை எடுத்ததாகவும் அஹிம்சா விக்ரமதுங்க  சட்ட மாஅதிபர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டவாட்சியை குறைத்து மதிப்பிடலுக்கு உட்படுத்தியதற்காக சட்ட மாஅதிபருக்கு எதிராக  குற்றப்பிரேரணை கொண்டுவர வேண்டும் என்று அவர் மேலும் கோரியுள்ளார்.

தனது தந்தைக்கு மட்டுமல்ல பாரிந்த ரணசிங்கவின் மேற்பார்வையின் கீழ் தவறாகக் கையாளப்பட்ட அல்லது கைவிடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் வலுவான நிலைக்கு கொண்டுவருவதற்காக செயற்படுமாறு அஹிம்சா விக்ரமதுங்க சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரியுள்ளார்.