Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

டெல்லியில் பதற்றம்; 40க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

.

டெல்லி முழுவதும் உள்ள 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று திங்கள்கிழமை காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொலிஸார் அதிக உஷார் நிலையில் உள்ளனர். மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

டிபிஎஸ், ஆர் கே புரம், டிபிஎஸ் வசந்த் குஞ்ச், ஜி.டி கோயங்கா, பஸ்சிம் விஹார், தி பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி, மாடர்ன் பள்ளி, கேம்பிரிட்ஜ் பள்ளி மற்றும் பல டிஏவி பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் மின்னஞ்சல்கள் வந்தன.

காலை 6.15 மணிக்கு ஜிடி கோயங்கா பஸ்சிம் விஹார் பள்ளிக்கு முதல் இ-மெயில் மிரட்டல் வந்தது, அதைத் தொடர்ந்து டிபிஎஸ் ஆர் கே புரம் காலை 7 மணிக்கு இதேபோன்று இ-மெயில் வந்துள்ளது என்று டெல்லி பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 11.38 மணிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில், பள்ளிகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

டெல்லி பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் கல்வி நிறுவனங்களுக்கு விரைந்தனர். முழுமையான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை எங்கும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இ-மெயில்கள் பதற்றத்தை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மின்னஞ்சல் அனுப்பியவர்களைக் கண்டறிய சைபர் கிரைம் பொலிஸார் பணியாற்றி வருகின்றன.

டெல்லி முதல்வர் அதிஷி தனது X பக்கத்தில், டெல்லியில் தினமும் இதுபோன்ற மிரட்டல், கொலை, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இப்போது பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது.

டெல்லியில் சட்டம்-ஒழுங்கு இவ்வளவு மோசமாக உள்ளது. பாஜக ஆளும் மத்திய அரசு, டெல்லி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தனது பணியில் தோல்வியடைந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

நவம்பரில், டெல்லி உயர் நீதிமன்றம் இதுபோன்ற அவசரநிலைகளைக் கையாள்வதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை (எஸ்ஓபி) உருவாக்குமாறு மாநில அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவுகளை வழங்கியது.