Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த போட்டி: பெரமுன கூறும் சட்டத்திருத்தம்

.

 

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பிலான அறிவிப்புகள் இன்னமும் வெளியாகாததால் அக்கட்சிக்குள் பல்வேறு நெருக்கடிகள் எழுந்துள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்நிறுத்த வேண்டுமென அமைச்சரவையில் இருக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும், அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

என்றாலும், அக்கட்சியில் உள்ள பசில் ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்சவின் தரப்பினர், பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்த வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி,

22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியின் பதவிக்காலத்தை குறைப்பதாக இருந்தால் அதற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும்.

ஆனால், தேர்தலை பிற்போடும் சரத்துகளை அதில் உள்வாங்கினால் அதற்கு அனுமதியளிக்க மாட்டோம்.

அதேபோன்று 22ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக 19ஆவது திருத்தச்சட்டத்தின் அதிகாரங்கள் குறைந்து ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.” என்றார்.