Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

போர் களத்தில் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்கள்; பொறுப்பு கூறவேண்டியது யார்?; தேசிய அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ரஷ்ய – உக்ரைன் மோதலில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்கள்.

போர் களத்தில் ஓய்வு பெற்ற இலங்கை வீரர்கள்; பொறுப்பு கூறவேண்டியது யார்?; தேசிய அரசாங்கம் மீது குற்றச்சாட்டு

ரஷ்ய – உக்ரைன் மோதலில் ஈடுபட்டுள்ள இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்கள் இணைந்துள்ளமைக்கு கடந்த கால அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள உலகளாவிய இலங்கை மன்றத்தின் நிறைவேற்றுச் செயலாளர் யசஸ் தர்மதாச, இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கு முன்னர், ரக்னா லங்கா மற்றும் அவன்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஓய்வுபெறும் இராணுவத்தினருக்கு வேலைகளை வழங்கியது.

ரஷ்ய மற்றும் உக்ரேனிய கூலிப்படையினருக்கு நிகரான சம்பளத்தை அவன்கார்ட் நிறுவனம் வழங்கியதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், தேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளினால், இந்த சந்தர்ப்பங்கள் அனைத்தும் இழக்கப்பட்டதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி, அவன்கார்ட் நிறுவனத்திற்கு எதிராக மேற்கொண்ட அவதூறு பிரச்சாரத்தினால் இழப்புகள் ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவன்ட்கார்ட் திட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணியின் தலையீடுகள் தொடர்பில் அதன் தலைவர் நிஷங்க சேனாதிபதி வெளியிட்ட கருத்துகளையும் தர்மதாச வலியுறுத்தியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களான ரணில் விக்ரமசிங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன, மறைந்த மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் பொறுப்பு கூறவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

போர்க்களத்தில் நிகழும் அவல வாழ்க்கைக்கு கூலித்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் அமைப்புகளும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும்தான் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.